close
Choose your channels

'சக்ரா' படத்தை வெளியிட சென்னை ஐகோர்ட் புதிய நிபந்தனை!

Wednesday, October 21, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் விஷால் நடித்த ’சக்ரா’ திரைப்படத்தை ஒடிடியில் ரிலீஸ் செய்வதை தடை செய்ய வேண்டும் என தயாரிப்பாளர் ரவீந்திரன் வழக்கு ஒன்றை பதிவு செய்தார் என்பதை பார்த்தோம். இந்த வழக்கில் விஷால் நடித்த ’ஆக்சன்’ படத்தால் தனக்கு 8 கோடிக்கும் மேல் நஷ்டம் என்றும், அந்த பணத்தை திருப்பித்தருவதாக விஷால் உறுதி அளித்து ஒப்பந்தம் செய்து இருந்ததாகவும், ஆனால் விஷால் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றும், அந்த பணத்தை விஷால் தனக்கு செலுத்த உத்தரவிட வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது

இந்த நிலையில் சமீபத்தில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ‘விஷால், தயாரிப்பாளர் ரவீந்திரனுக்கு ரூ.4 கோடி தர வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய விஷால் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது

இந்த நிலையில் ரூ.4 கோடிக்கான உத்தரவாதத்தை செலுத்தி விஷால் நடித்த ’சக்ரா’ படத்தை வெளியிடலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து 'சக்ரா' படத்தை ஓடிடி-யில் வெளியிட தடை விதிக்கக்கோரி தயாரிப்பாளர் ரவீந்திரன் தொடர்ந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.