close
Choose your channels

மனைவியிடம் கோபம்: தனக்குத்தானே ஆணுறுப்பை அறுத்து கொண்ட சென்னை நபர்!

Thursday, January 2, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மனைவியிடம் சண்டை போட்ட ஏற்பட்ட கோபத்தில் கத்தியை எடுத்து தனக்குத்தானே தன்னுடைய ஆணுறுப்பை அறுத்துக் கொண்ட சென்னை நபர் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பாபு என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தேவி என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆனது. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை என தெரிகிறது. இந்த நிலையில் பாபு அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் சண்டை செய்து கொண்டிருப்பாராம். இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ஒரு கட்டத்தில் பாபுவை விவாகரத்து செய்ய தேவி முடிவு செய்தார்.

இந்த நிலையில் சாதாரண நாட்களிலேயே மது அருந்திவிட்டு வரும் பாபு, நேற்றைய புத்தாண்டு தினத்தில் முழு போதையுடன் வீட்டிற்கு வந்து மீண்டும் தேவியுடன் சண்டை போட்டுள்ளார். இதனால் மனம் வெறுத்த தேவி, இனிமேல் உங்களுடன் வாழ முடியாது என்றும் நான் உங்களிடம் இருந்து விவாகரத்து பெற போகிறேன் என்றும் கூறியுள்ளார்.

இதனை சற்றும் எதிர்பார்க்காமல் அதிர்ச்சி அடைந்த பாபு, நேராக சமையலறைக்கு சென்று அங்கு காய்கறி வெட்ட வைத்திருக்கும் கத்தியை எடுத்து தனக்குத்தானே தன்னுடைய ஆணுறுப்பை அறுத்துக் கொண்டார். இதனை அடுத்து வலியால் துடித்த அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

மனைவிடம் ஏற்பட்ட தகராறு காரணமாக தனக்கு தானே தன்னுடைய ஆணுறுப்பை அறுத்துக் கொண்ட பாபுவால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.