close
Choose your channels

வகுப்பறையில் தூக்கில் தொங்கிய ஆசிரியர்: கதறி அழுத மாணவர்கள்

Tuesday, April 9, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை அருகே உள்ள நீலாங்கரையில் தனியார் பள்ளி ஒன்றில் வகுப்பறையிலேயே ஆசிரியர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பள்ளி மாணவ, மாணவியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சென்னை நீலாங்கரை சரஸ்வதி நகரில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் இன்று காலை வழக்கம்போல் மாணவ, மாணவிகள் ஆசிரியர்கள் வந்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் எட்டாம் வகுப்பறைக்கு மாணவர்கள் சென்றபோது அங்கு அந்த வகுப்பின் ஆசிரியர் அந்தோனி ஜெனிபர் தூங்கில் தொங்கியதை பார்த்து மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மாணவர்களின் அலறல் குரல் கேட்டு ஓடி வந்த மற்ற ஆசிரியர்களும், தலைமை ஆசிரியரும் உடனடியாக இதுகுறித்து காவல்துறையினர்களுக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் தூக்கில் தொங்கிய ஆசிரியரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆசிரியர் ஜெனிபர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.