close
Choose your channels

பிக்பாஸ் வீட்டில் அப்பா-மகள் உறவு: சேரனின் விளக்கம்

Tuesday, October 15, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராகிய சேரன், சக போட்டியாளர் லாஸ்லியா மீது அப்பா பாசத்தை பொழிந்தார் என்பதும், ஒரு அப்பா, தனது மகள் மீது பாசத்தையும் கண்டிப்பையும் எப்படி வெளிப்படுத்துவாரோ அவ்வாறே வெளிப்படுத்தினார் என்பதும் தெரிந்ததே. இருப்பினும் சேரன், லாஸ்லியா மீது பொய்யான அப்பா பாசத்தை காண்பிப்பதாக போட்டியாளர்கள் சிலரும், வெளியே உள்ள பலரும் பேசினார்கள். இதுகுறித்து சமீபத்தில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழா ஒன்றில் சேரன் கூறியதாவது:

’வாழ்க்கையில் நான் அப்பா என்று உணர்கின்ற தருணம் மிகவும் உன்னதமானது. அதை கடவுள் எனக்கு அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொண்டே இருப்பார். சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட அப்பாவாக வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டது. அந்த நிகழ்ச்சியிலும் நான் அப்பாவாக எந்த நேரத்திலும் நடிக்கவில்லை. ஒரு அப்பாவாகவே உண்மையாகவும், நேர்மையாகவும் இருந்தேன்.

அப்பா - மகள் பாசத்தை நான் பொய்யாக காண்பித்தேன் என்றால் இந்த உலகத்தில் வாழ்வதற்கே அருகதை இல்லாதவன். தந்தை மகளுக்கான பாசத்தில் அளவீடு எதுவுமே இல்லை.

மேலும் நான் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது என்னுடைய நண்பர் வசந்தபாலன் கூறிய விஷயம் நான் உள்ளே இருக்கும்போதே தெரியும். அப்போது நான் கூறியதெல்லாம், ‘அவர் என்னுடைய நண்பர். என்மேல் உள்ள அக்கறை, பாசத்தினால்தான் அவர் அவ்வாறு கூறியிருப்பார் என்று கூறினேன்’ என்றும் சேரன் பேசினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.