close
Choose your channels

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்: மேலும் ஒருவர் கைது!

Saturday, January 4, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

குழந்தைகள் ஆபாச படம் பார்த்தவர்கள் மற்றும் பகிர்ந்தவர்கள் கைது செய்யப்படுவார்கள் என ஏற்கனவே காவல்துறை அதிகாரிகள் எச்சரித்து இருந்த நிலையில் சமீபத்தில் திருச்சியில் குழந்தைகள் ஆபாச படத்தை பார்த்த ஒருவர் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது

அதேபோல் சென்னையில் 70 வயது நபர் ஒருவர் குழந்தைகள் ஆபாச படத்தை பார்த்தது மட்டுமின்றி கல்லூரி மாணவிகளுக்கு அந்த வீடியோக்களை பகிர்ந்து அத்துமீறி நடந்ததால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் குழந்தைகள் ஆபாச படம் பார்த்த விவகாரத்தில் மேலும் ஒருவர் கோவையில் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரெண்டா பாசுமாடரி என்பவர் குழந்தைகள் ஆபாச படம் பார்த்ததாக கோவை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதேபோல் குழந்தைகள் ஆபாச படங்களை பார்ப்பவர்கள் மற்றும் பகிர்பவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி கைது நடவடிக்கை எடுக்கப்படும் என போலிசார் எச்சரிக்கை செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.