close
Choose your channels

'தர்பார்' படத்தால் எனக்கு மிகுந்த மனவருத்தம்: பிரபல இசையமைப்பாளர் பேட்டி

Sunday, January 5, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

‘தர்பார்’ படத்தால் தனக்கு மிகுந்த மனவருத்தம் ஏற்பட்டுள்ளதாக பிரபல இசை அமைப்பாளரும் இசையமைப்பாளர் சங்கத் தலைவரும் தீனா தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ படம் வரும் 9-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நேற்று சென்னை வடபழனியில் உள்ள இசையமைப்பாளர் சங்க அலுவலகத்தில் இசையமைப்பாளர் சங்கத்தின் தலைவர் தீனாசெய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியபோது, ‘ஒரு தமிழ் படத்திற்கு பின்னணி இசை அமைக்கும்போது தமிழகத்தில் உள்ள இசைக்குழுவினர்களை அதிகமாக பயன்படுத்த வேண்டும் என்று சங்கத்தில் விதி உள்ளது. ஆனால் ‘தர்பார்’ படத்தில் அதிகபட்சமாக வெளிநாட்டு இசைக்கலைஞர்களை அனிருத் பயன்படுத்தியுள்ளார். அவரிடம் நாங்கள் இது குறித்து கோரிக்கை விடுத்தும் அவர் தமிழக இசைக் கலைஞர்கள் பயன்படுத்துவதாக கூறிவிட்டு பயன்படுத்தாமலேயே படத்தை முடித்துள்ளார். இது எங்களுக்கு மிகுந்த மன வருத்தத்தை தருகிறது.

ஒரு தமிழ்படத்தில் தமிழக இசைக் கலைஞர்களுக்கு வேலை கொடுக்கவில்லை என்றால் அவர்களுடைய நிலை என்ன ஆகும்? என்பதை அனிருத் போன்ற இசையமைப்பாளர்கள் யோசித்து பார்க்க வேண்டும். இதுகுறித்து நாங்கள் பெப்சியில் புகார் அளிக்க உள்ளோம்’ என்று தீனா கூறியுள்ளார். அனிரூத் மீது தீனா கூறிய இந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.