close
Choose your channels

சீனாவில் மீண்டும் பரவும் கொரோனா: புதியதாக 5 பேர் பலி

Sunday, March 29, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சீனாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வூகான் என்ற மாகாணத்தில் கொரோனா வைரஸ் உருவாகி பரவ ஆரம்பித்தது. இதனை அடுத்து நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவியது மட்டுமின்றி உலகம் முழுவதும் தற்போது பரவி உள்ளது. குறிப்பாக அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் கொரோனா வைரஸின் தாயகமாக கருதப்படும் சீனா தற்போது கொரோனாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு, இயல்பு நிலை திரும்பி விட்டதாக கூறப்படுகிறது. சினிமா தியேட்டர்கள் உள்ளிட்டவை திறக்கப்பட்டு, போக்குவரத்தும் தொடங்கிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக தற்போது மீண்டும் கொரோனா காய்ச்சலுக்கு புதிதாக சுமார் 45 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 5 பேர் பலியாகி இருப்பதாகவும் வெளிவந்துள்ள செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சீன சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்த போது, ‘கொரோனா வைரஸ் தொற்று கணிசமான அளவில் குறைந்திருந்தாலும் கடந்த 2 நாட்களில் மட்டும் மீண்டும் 45 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பரவி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மீண்டும் சீனாவில் கட்டுப்பாடுகள் வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos