close
Choose your channels

வைரமுத்துவின் விளக்கத்திற்கு சின்மயி ரியாக்சன்

Wednesday, October 10, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பெண் பத்திரிகையாளர், பாடகி சின்மயி உள்பட ஒருசில பெண்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் கவியரசர் வைரமுத்து மீது தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுக்களை தெரிவித்து வரும் நிலையில் இந்த குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் சற்றுமுன் வைரமுத்து தனது சமூக வலைத்தளத்தில் ஒரு டுவீட்டை பதிவு செய்தார். அந்த டுவிட்டில் "அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும" என்று அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் வைரமுத்துவின் இந்த விளக்கத்திற்கு பாடகி சின்மயி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் 'பொய்யர்' என்ற ஒரே ஒரு வார்த்தையை மட்டும் பதிவு செய்துள்ளார்.

வைரமுத்து விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துவிட்டதால் இனிமேலும் டுவிட்டரில் குற்றஞ்சாட்டாமல் அவர் தவறு செய்தது உண்மையாக இருக்கும்பட்சத்தில் தகுந்த ஆதாரங்களுடன் காவல்துறையில் சின்மயி புகார் அளிக்க வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.