close
Choose your channels

கலைமாமணியைத் தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுற்கு மற்றொரு விருது… குவியும் பாராட்டு!

Saturday, February 27, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிறந்த நடிப்புக்காக மக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்று வருகிற நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு தமிழக அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான மற்றொரு விருதையும் இவர் பெற்று இருக்கிறார்.

சென்னையில் 18 ஆவது சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று முடிந்தது. இந்த விழாவில் சிறந்த கலைஞர்கள், சிறந்த படங்களுக்கு விருது வழங்கும் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் க/பெ ரணசிங்கம் திரைப்படத்தில் உணர்ச்சிபூர்வமாக நடித்து அனைவரது மனதிலும் இடம் பிடித்து விட்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த விருது வழங்கும் விழாவில் சிறந்த படமாக “என்றாவது ஒருநாள்” திரைப்படம் தேர்வாகி உள்ளது.

ஏற்கனவே 33 சர்வதேச விருதுகளை வாங்கி குவித்து இருக்கிற இந்தப் படத்தை இயக்குநர் வெற்றி துரைசாமி எழுதி, தயாரித்து இருந்தார். இதில் கதாநாயகனமாக விதார்த், கதாநாயகியாக ரம்யா நம்பீசன் ஆகியோர் நடித்து இருந்தனர். இந்நிலையில் சிறந்த படத்திற்கான விருது இயக்குநர் வெற்றி துரைசாமிக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது. அந்த வரிசையில் சிறந்த நடிகைக்கான விருதினை க/பெ ரணசிங்கம் திரைப்படத்திற்காக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பெற்றுக் கொண்டார்.

க/பெ ரணசிங்கம் திரைப்படத்தை இயக்குநர் விருமாண்டி இயக்கி இருந்தார். கதாநாயகனாக நடிகர் விஜய்சேதுபதி நடித்த இப்படம் சமீபத்தில் ஜுதிரையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சிறந்த நடிகைக்கான விருது பெற்ற நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது பாராட்டு மழையில் நனைந்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.