close
Choose your channels

நாளை சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை: முதல்வர் அறிவிப்பு

Sunday, November 7, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நாளை சென்னை உள்பட நான்கு மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக கடந்த 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் மீண்டும் சென்னையில் ஒரேநாளில் இருபத்தி மூன்று சென்டிமீட்டர் மழை பெய்து உள்ளது என்பதும் இதனால் சென்னையில் உள்ள பல பகுதிகளில் மழைநீர் வெள்ளக்காடாக உள்ளது என்பதும் ஒரு சில வீடுகளிலும் வெள்ள
நீர் புகுந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் களத்தில் இறங்கி வெள்ள மீட்பு பணிகளை பார்வையிட்டு வருகிறார் என்பதும் அமைச்சர் பெருமக்களும் வெள்ள மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறை என முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார், அதுமட்டுமின்றி தீபாவளி விடுமுறைக்காக வெளியூர் சென்றவர்கள் சென்னைக்கு திரும்பி வருபவர்கள் பயணத்தை தள்ளி வைக்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.