close
Choose your channels

பெற்றோர்கள் திருமணத்திற்கு சம்மதிக்காததால் தூக்கில் தொங்கிய காதலர்கள்: அதிர்ச்சி தகவல்

Sunday, July 26, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஷாஜஹான்பூர் என்ற பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞர் ஒருவரும் அவரது நெருங்கிய உறவினரான 18 வயது பெண் ஒருவரும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருவரும் தீவிரமாக காதலித்து வந்ததாகவும் ஆனால் இருவரது பெற்றோர்களும் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை என்பதால் மனமுடைந்து மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

21 வயது இளைஞரின் தந்தை வேறு ஒரு பெண்ணை அவருக்கு திருமணம் செய்து வைக்க முயற்சித்ததாகவும் இதனையடுத்து அந்த இளைஞர் தனது தந்தையாரிடம் தான் காதலிக்கும் உறவினர் பெண்ணையே தனக்கு திருமணம் செய்து வைக்கும்படியும் வாதம் செய்ததாகவும் ஆனால் தந்தை அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.

அதேபோல் இளைஞரின் காதலியான 18 வயது பெண்ணின் பெற்றோர்களும் இந்த காதலுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனை அடுத்து திடீரென இளைஞரும் அவருடைய காதலியும் மாயமானார்கள். அவர்களை தேடும் பணியில் இருதரப்பு பெற்றோர்களும் ஈடுபட்டிருந்த நிலையில் அருகிலுள்ள காட்டில் ஒரு மரத்தில் இருவரும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதனை அடுத்து இதுகுறித்து போலீசார் இரு தரப்பு பெற்றோர்களிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்காததால் இளம் ஜோடி தூக்கில் தொங்கி தங்களது உயிரை விட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos