close
Choose your channels

நம்ம அடி வாங்குறாங்க பக்கம்தான் நிக்கணும்: 'கழுவேத்தி மூர்க்கன்' படம் குறித்து டி இமான்..!

Friday, July 14, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அருள்நிதி நடிப்பில் கௌதம் ராஜ் இயக்கத்தில் உருவான ‘கழுவேத்தி மூர்க்கன்’ என்ற திரைப்படம் கடந்த மே மாதம் 26 ஆம் தேதி வெளியானது என்பதும் இந்த படம் நல்ல விமர்சனத்தை பெற்றது என்பதையும் பார்த்தோம்.

திரையரங்குகளை அடுத்து இந்த படம் ஓடிடியிலும் வெளியாகி குடும்ப ஆடியன்ஸ்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளன. இந்த நிலையில் இந்த படம் குறித்தும் இந்த படத்தின் கதையம்சம் குறித்தும், அதில் சொல்லப்பட்டிருக்கும் சமூக கருத்துக்கள் குறித்தும் இன்னும் சமூக வலைதளங்களில் விவாதம் ஆகி வருகிறது.

இந்த படம் வெளியாகி 50 நாட்களுக்கு மேல் ஆகியும் இந்த படம் குறித்த விவாதம் நடந்து கொண்டிருப்பதை அறிந்த இந்த படத்தின் இசையமைப்பாளர் டி இமான் தனது சமூக வலைதளத்தில் ஒரு பதிவை செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

50 நாட்களாக தொடர்ந்து சமூக ஊடகங்களில் "கழுவேத்தி மூர்க்கனை' பற்றி எழுதிக் கொண்டிருக்கிறார்கள். தலைவர்களும் திரை ஆளுமைகளும் முற்போக்காளர்களும் பல மேடைகளில் படத்தினை பற்றி பேசிக் கொண்டே இருக்கிறார்கள். படம் சார்ந்த கூட்டங்கள் நடந்து கொண்டே இருக்கிறது. பத்துக்கும் மேலான காட்சிகள் தனியாக சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டு இருக்கிறது.

ஒரு நல்ல திரைப்படம் என்பது சமூகத்தில் ஒரு உரையாடலை நிகழ்த்த வேண்டும், ஏதோ ஒன்றை விட்டுச் செல்ல வேண்டும், படம் பேசும் தளத்திலான சூழல்கள் உருவாகும் போது படம் மீண்டும் திரும்பிப் பார்க்கப்பட வேண்டும். அதுவே வெற்றி.

50 நாட்களாக கழுவேத்தி மூர்க்கன் அவ்வேலையை செய்தபடி பயணித்துக் கொண்டே இருக்கிறான், "நம்ம அடிவாங்குறவங்க பக்கம்தான் நிக்கணும், அவங்கள அடி வாங்காம பார்த்துக்கணும்.. கழுவேத்திமூர்க்கன். தோள் கொடுத்தவர்களுக்கு கை குலுக்கி நன்றிகளும் பூங்கொத்துக்களும்.. தொடர்கிறது பயணம்..

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos