close
Choose your channels

மகனின் முயற்சியால் மீண்டும் இணைந்த தனுஷ்-ஐஸ்வர்யா: வைரல் புகைப்படம்

Monday, August 22, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினி தம்பதிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரிந்த நிலையில் தற்போது இந்த தம்பதியின் மகன் முயற்சியால் மீண்டும் இணைந்துள்ள புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது

தனுஷ், ஐஸ்வர்யா தம்பதியின் மூத்த மகன் யாத்ரா படிக்கும் பள்ளிக்கு இன்று ஐஸ்வர்யா சென்றுள்ளார். அங்கு தனது மகன் விளையாட்டு அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளதை அவர் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். காவி கொடியை கொண்ட அணி ஒன்றுக்கு தனது மகன் தான் கேப்டன் என்பதையும் ஐஸ்வர்யா பெருமையுடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்த புகைப்படத்தை திங்கள் காலையில் பதிவு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று ஐஸ்வர்யா அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்

மேலும் இந்த விழாவில் நடிகர் தனுஷும் பங்கேற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷ், ஐஸ்வர்யா மற்றும் அவர்களது இரண்டு மகன்களுடன் இணைந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் பாடகர் ஜேசுதாஸின் மகன் விஜய் ஜேசுதாஸ் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தனுஷ் மகன் யாத்ரா விளையாட்டு அணிக்கு கேப்டன் ஆகியுள்ளதை அடுத்து இந்த விழாவில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் இணைந்து பங்கேற்றுள்ளதை அடுத்து, இதேபோல் இருவரும் நிரந்தரமாக இணைய வேண்டும் என ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.