close
Choose your channels

'நானே வருவேன்' படத்தின் மாஸ் அப்டேட்டை கூறிய தனுஷ்: ரசிகர்கள் மகிழ்ச்சி!

Monday, April 11, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் ’நானே வருவேன்’ மற்றும் வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகிவரும் ‘வாத்தி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படப்பிடிப்புகளிலும் மாறி மாறி தனுஷ் கலந்து கொண்ட நிலையில் தற்போது ’நானே வருவேன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக சற்றுமுன் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தனுஷ், செல்வராகவன், எல்லி அவ்ரம், இந்துஜா ரவிச்சந்திரன், யோகி பாபு உள்பட பலரது நடிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார் .

யுவன்சங்கர் ராஜா இசையில், ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில், பிரசன்னா படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. தனுஷின் 44வது படமான படமாக உருவாகி வரும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.