close
Choose your channels

சிவராத்திரி தினத்தில் பக்தி மழையில் நனைந்த தனுஷ்!

Friday, February 21, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இன்றைய சிவராத்திரியை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள சிவாலயங்களில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் தமிழகத்தில் உள்ள பலர் தங்கள் குல தெய்வக் கோயில்களில் சிவராத்திரி தினத்தன்று சுவாமி வழிபாடு செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் நடிகர் தனுஷ் தனது குடும்பத்துடன் இன்று குலதெய்வ கோவிலுக்கு சென்று சுவாமி வழிபாடு செய்துள்ளார். நடிகர் தனுஷின் தந்தை இயக்குனர் கஸ்தூரிராஜாவின் சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் உள்ள மல்லிங்கபுரம் என்ற பகுதியில் தான் அவர்களது குலதெய்வமான கஸ்தூரி மங்கம்மாள் என்ற ஆலயம் உள்ளது. இந்த கோவிலுக்கு நடிகர் தனுஷ் தனது மனைவி மற்றும் மகன்களுடன் சென்று தரிசனம் செய்தார். ஒவ்வொரு வருடமும் சிவராத்திரி தினத்தில் குலதெய்வம் கோயிலுக்கு தனது குடும்பத்துடன் சென்று வழிபடுவதை தனுஷ் வழக்கமாக வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது கார்த்திக் சுப்புராஜின் ’ஜகமே தந்திரம்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கர்ணன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தை அடுத்து அவர் பாலிவுட்டில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.