close
Choose your channels

திலீப் கைது எதிரொலி: நடிகர், தயாரிப்பாளர் சங்கங்கள் எடுத்த அதிரடி முடிவு

Tuesday, July 11, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகர் திலீப், நடிகை பாவனா வழக்கில் அதிரடியாக நேற்று கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் இருப்பதாக போலீஸார் ஆணித்தரமாக கூறியுள்ளதால் அவருக்கு தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து திலீப் நீக்கப்பட்டுள்ளதாக அதிரடி அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இன்று கொச்சியில் உள்ள நடிகர் மம்முட்டி இல்லத்தில் நடைபெற்ற கேரள நடிகர் சங்க அமைப்பான 'அம்மா' சங்கத்தின் அவசர ஆலோசனை கூட்டத்தில் பாவனா கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் திலீப் நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி கேரள தயாரிப்பாளர் சங்கமும் திலீப்பை சங்கத்தில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது. இந்த இரு சங்கங்களின் அதிரடி முடிவு மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.