close
Choose your channels

பட்ஜெட் அதிகமாக நான் காரணமா? விளக்கமளித்த 'கோப்ரா' இயக்குனர்!

Thursday, February 17, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கிய ‘கோப்ரா’ திரைப்படம் நிர்ணயிக்கப்பட்ட பட்ஜெட்டை விட அதிகமாக செலவு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அது குறித்து இயக்குனர் அஜய் ஞானமுத்து தனது விளக்கத்தை அளித்துள்ளார்.

சமீபத்தில் ‘கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்து இயக்குனர் அஜய் ஞானமுத்து தனது டுவிட்டரில் டுவிட்டை பதிவு செய்திருந்தார். இந்த டுவிட் குறித்து ஒரு சிலர் கேள்வி எழுப்பியபோது, ‘தயாரிப்பாளருக்கு அதிக பட்ஜெட்டை இழுத்துவிட்டு அவருக்கு ஒரு நன்றி கூட தெரிவிக்க வில்லையே’ என்று கூறியிருந்தனர்.

இதற்கு விளக்கம் கொடுத்த இயக்குனர் அஜய் ஞானமுத்து, ‘கோப்ரா’ பட்ஜெட் அதிகமானதற்கு நான் காரணம் இல்லை என்றும், இதை எப்போது வேண்டுமானாலும் என்னால் நிரூபிக்க முடியும் என்றும், எனவே ஆதாரம் இல்லாமல் எதையும் பேச வேண்டாம் என்றும் தெரிவித்தார். மேலும் படக்குழு என்றால் அது தயாரிப்பாளரையும் சேர்த்து தான் என்றும் நான் என்றுமே அவரை கைவிடவில்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.