close
Choose your channels

சமந்தா-நாக சைதன்யாவை இணைத்து வைக்க பெண் இயக்குனர் முயற்சியா?

Monday, April 4, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமந்தா மற்றும் நாக சைதன்யாவை மீண்டும் இணைத்து வைக்க பெண் இயக்குனர் ஒருவர் முயற்சிப்பதாக கூறப்படுவதால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகை சமந்தா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது கணவர் நாகசைதன்யாவை பிரிந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு சமந்தா மற்றும் நாக சைதன்யா ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பதும் இருவரும் மீண்டும் இணைந்து வாழவேண்டும் என்ற தங்களது விருப்பத்தை சமூக வலைதளங்கள் மூலம் வெளிப்படுத்தினார்கள் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு சமந்தா நடிப்பில் வெளிவந்த ’ஓ பேபி’ என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் நந்தினி ரெட்டி தனது அடுத்த படத்திற்காக சமந்தா மற்றும் நாக சைதன்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். சமந்தா நாகசைதன்யா பிரிவுக்கு முன்னரே இந்த படம் குறித்த பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அந்த படத்தை தொடங்குவதற்கான முயற்சிகளில் நந்தினி ரெட்டி உள்ளார்.

தற்போதைய நிலையில் இந்த படத்தில் சமந்தா மற்றும் நாக சைதன்யாவை நடிக்க வைக்க அவர் முயற்சி செய்வார் என்றும், ஒருவேளை இருவரும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை என்றால் யாராவது ஒருவரை மாற்ற அவர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.