close
Choose your channels

5ஆம் பாகம் வரை 'பசங்க' படம் தொடரும். பாண்டியராஜன்

Tuesday, December 29, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் எம்.ராஜேஷ் என்றால் காமெடி படம், ராகவா லாரன்ஸ் என்றால் பேய்ப்படம், சிறுத்தை சிவா என்றால் ஆக்சன் படம் என ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒவ்வொரு பாணி இருப்பதைபோல இயக்குனர் பாண்டியராஜின் பாணி குழந்தைகளை மையமாக வைத்து படமெடுப்பது. 'பசங்க' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி பெரும் வெற்றி பெற்ற இயக்குனர் பாண்டியராஜன் சமீபத்தில் இயக்கிய 'பசங்க 2' திரைப்படமும் முதல் பாகத்தை போலவே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது

இந்நிலையில் பசங்க படத்தின் இரண்டாம் பாகத்துடன் முடித்து கொள்ள தன்னால் முடியாது என்றும் தொடர்ந்து பசங்க 3, பசங்க 4, பசங்க 5 என பாகங்கள் நீண்டுகொண்டே போகும் என்றும் அவர் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.


குழந்தைகளை மையமாக வைத்து படமெடுக்க முக்கிய காரணம், குழந்தைகளுக்கு தேவையான படத்தை எடுத்தால் கண்டிப்பாக பெற்றோர்களும் அந்த படத்தை பார்த்தே ஆகவேண்டும் என்பதால் இவ்வகை படங்கள் எளிதில் வெற்றி பெற்றுவிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் பாண்டியராஜ் இயக்கிய அடுத்த படமான 'கதகளி' வரும் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.