close
Choose your channels

'என்னத்த சொல்றது': 'ஜெய்பீம்' படம் குறித்து இயக்குனர் பார்த்திபன்! 

Saturday, November 6, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடித்த ’ஜெய்பீம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்பட பல அரசியல் பிரபலங்களும் உலக நாயகன் கமல்ஹாசன் உள்பட பல திரையுலக பிரபலங்களும் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் தனது சமூக வலைத்தளத்தில் ’ஜெய்பீம்’ படம் குறித்து ’என்னத்த சொல்றது’ என்ற தலைப்பில் தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

சட்டத்தை நீதி/நிதி எதுக்கும் பயன்படுத்தலாம். அப்படியே சினிமாவையும். நிறைய காசுக்கும் நல்ல causeக்கும் ஒரு சினிமா மூலமாக சட்டத்தின் பயன்பாடு அதுவும் ஏற்கனவே இருண்டு கொண்டிருக்கும் வாழ்வில் சிறு நம்பிக்கை ஒளியை ஏற்படுத்தி அதையும் இது ஒரு கமர்சியல் என்று வண்ணம் பூசிக் கொள்ள வண்ணம் உலக அளவில் கமர்ஷியலாகவும் வென்றிருக்கும் திரைப்படத்தை பார்க்க துவங்கி கரைந்தே போனேன்.

சந்துரு சார்! இது பெயர் அல்ல. நீதி என்ற பதத்தின் மொழிபெயர்ப்பு. அவரை நான் நல்லது செய்யும் மேடைகளில் நடுநாயகமாக அமர்த்தி கௌரவம் தேடி கொண்டுள்ளேன். அவரின் வாழ்க்கையை படமாக்கவும் ஆசைப்பட்டு உள்ளேன். அது இன்று திரு ஞானவேல் அவர்கள் மூலம் நிறைவேறி பிரபஞ்சம் சந்துருவை பாராட்ட, மெய் சிலிர்க்கின்றேன். சினிமா மூலம் சமூகத்திற்கு கோடான கோடி நன்மை செய்திருக்கும் மாண்புமிகு சூர்யா மற்றும் ஜோதிகா அவர்களை மானசீகமாக வணங்குகிறேன் என்று இயக்குனர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.