close
Choose your channels

நயன்தாரா இல்லாமல் சிங்கிளாய் பொங்கல் கொண்டாடும் விக்னேஷ் சிவன்: வைரல் புகைப்படம்

Friday, January 14, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் ஒவ்வொரு திருவிழாவையும் நயன்தாராவுடன் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டு உள்ளார் என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக சமீபத்தில் 2022ஆம் ஆண்டு புத்தாண்டு நாளை துபாயில் நயன்தாராவுடன் அவர் கொண்டாடினார் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணைய தளங்களில் வைரலானது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இன்று பொங்கல் தினத்தையும் நயன்தாராவுடன் இணைந்து கொண்டாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விக்னேஷ் சிவன் சபரிமலையில் பொங்கல் தினத்தில் தனியாக கொண்டாடும் புகைப்படமாக வெளியிட்டு உள்ளார். அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் என்றும் சபரிமலையில் செய்யும் பிரார்த்தனை மற்றும் நல்ல நினைவுகள் அனைவருக்கும் சந்தோஷத்தை தரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

விக்னேஷ் சிவன் சபரிமலையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் அந்தப் புகைப்படத்திற்கு ஒரு சில மணி நேரங்களில் 3 லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ் குவிந்துள்ளது. மேலும் இந்த புகைப்படத்தில் ஒரு ரசிகர், ‘என்ன தலைவா, சிங்கிளா வந்திருக்கிங்க’ என்று கமெண்ட்ஸ் செய்துள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.