close
Choose your channels

நீஜத்தில் ஹீரோவாக வேண்டுமா? ரசிகர்களுக்கு நடிகை ஆண்ட்ரியா வைத்த முக்கிய வேண்டுகோள்!

Wednesday, February 9, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் மற்றும் பாடகியாகவும் வலம்வரும் ஆண்ட்ரியா ஜெர்மையா தற்போது சோஷியல் மீடியாவில் ஒரு முக்கியமான வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் போல்டான பல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றவர் நடிகை ஆண்ட்ரியா. அவர் தற்போது இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் “பிசாசு 2“ திரைப்படத்திலும் இயக்குநர் தினேஷ் செல்வா இயக்கத்தில் கடற்கன்னி கதாபாத்திரத்திலும் நடித்துவருகிறார். தொடர்ந்து சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாகச் செயல்பட்டு வரும் இவர் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு முக்கியமான கருத்தைப் பதிவிட்டு இருக்கிறார்.

அதில் நீங்கள் நல்லது செய்ய விரும்பினால் இன்றே ரத்ததானம் செய்யுங்கள். நீண்ட நாட்களாக இந்த எண்ணம் என்னுடைய மனதில் இருந்துவந்தது. அதனால் நான் சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் இரத்த வங்கிக்கு சென்றேன். அங்கு எனக்கு பிபி மற்றும் ஹீமோகுளோபின் அளவை சரிப்பார்த்தப் பின்பு ரத்தத்தை எடுத்துக்கொண்டார்கள்.

நம்முடைய 80% பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கும். இரத்த அழுத்தமும் குறைவாக இருக்கும். அப்படித்தான் இதற்கு முன்பு என்னால் ரத்ததானம் செய்ய முடியாமல் போனது. ஆனால் தற்போது என்னால் முடிகிறது. நிஜவாழ்க்கையில் நீங்கள் ஹீரோவாக இருக்க விரும்பினால் இன்றே ரத்ததானம் செய்து ஒரு உயிரைக் காப்பாற்றுங்கள் என நடிகை ஆண்ட்ரியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேண்டுகோள் வைத்துள்ளார். இந்தப் பதிவிற்கு ரசிகர்கள் பாராட்டுகளைக் குவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.