close
Choose your channels

எடப்பாடி பழனிச்சாமி உள்பட 10 அமைச்சர்களுக்கு ஆளுனர் அழைப்பு

Tuesday, February 14, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அதிமுக சட்டமன்ற தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்ட நிலையில் அவரை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுக்கவில்லை. இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதால் சசிகலாவுக்கு பதிலாக எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தன்னை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என்று கவர்னருக்கு கோரிக்கை விடுத்தார். இந்நிலையில் சற்று முன்னர் எடப்பாடி உள்பட 10 அமைச்சர்கள் தன்னை சந்திக்குமாறு ஆளுனர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில் மாலை 5.30 மணிக்கு எடப்பாடி பழனிச்சாமி, திண்டுக்கல் சீனிவாசன், விஜயபாஸ்கர், செங்கோட்டையன் உள்பட மூத்த அமைச்சர்கள் ஆளுனர் மாளிகை செல்லவுள்ளனர்.,

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.