close
Choose your channels

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Tuesday, April 11, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நாளை நடைபெறவிருந்த ஆர்.கே.நகர் தேர்தல் அதிகளவிலான பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆதாரங்கள் கிடைத்ததால் தேர்தல் ஆணையம் இந்த தேர்தலை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது. இந்த நிலையில் இந்த தொகுதியில் தேர்தல் எப்போது என்பது குறித்த அறிவிப்பு ஒன்றை தேர்தல் ஆணையம் சற்று முன்னர் அறிவித்துள்ளது.
இதன்படி ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் இன்னும் ஓராண்டு காலத்திற்குள் தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிகளின் படியும், மத்திய அரசின் ஆலோசனையின்படியும் நடத்தப்படும் என்று இன்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும் ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டுவிட்டதால் வேட்பாளர்கள் தங்கள் டெபாசிட் தொகையை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் விண்ணப்பித்து 15 நாட்களுக்குள் பெற்றுக் கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.