close
Choose your channels

நக்கல் நய்யாண்டி எல்லாம் வேற யார்கிட்டயாவது வச்சுக்கோ: 'எனிமி' தயாரிப்பாளரின் சூடான டுவீட்

Sunday, April 11, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’நக்கல் நையாண்டி எல்லாம் வேற யார்கிட்டயாவது வச்சுக்கோ, மரியாதை கொடுத்து மரியாதை வாங்கு’ என விஷால் ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் ’எனிமி’ படத்தை தயாரித்து வரும் தயாரிப்பாளர் டுவிட்டில் பதிவு செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஷால் நாயகனாகவும், ஆர்யா வில்லனாகவும் நடித்து வரும் திரைப்படத்தை இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கி வருகிறார். இந்த படத்தின் பெரும்பாலான பகுதிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் வினோத் குமார் தனது டுவிட்டரில் ’எனிமி அப்டேட் கேட்டவர்களுக்கு ஒரு இனிய தகவல். இந்த படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது. சென்னையில் இன்னும் 10 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு பாக்கி உள்ளது. அதையும் விரைவில் முடிக்க திட்டமிட்டுள்ளோம். மேலும் இன்னும் இரு வாரங்களில் இந்த படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் டுவிட்டர் பயனாளி ஒருவர், ‘யாரு இவன் கிட்ட அப்டேட் கேட்டது?? என்று பதிவு செய்ய அதற்கு சூடான பதிலடி கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் வினோத். ’நக்கல் நையாண்டி எல்லாம் வேற யார்கிட்டயாவது வச்சுக்கோ, புடிக்கலைன்னா வராத, நல்ல பதில் கிடைக்கும் பாத்துக்கோ. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கிக்கோ’ என்று பதிலடி கொடுத்துள்ளார். இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.