close
Choose your channels

எஞ்ஜாய் எஞ்சாமி பாடல் கலைஞர் காலமானார்: தெருக்குரல் அறிவு உருக்கமான இரங்கல்!

Friday, July 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் தெருகுரல் அறிவு உள்பட பலர் பாடிய என்ஜாய் என்ஜாய் என்ற பாடல் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது என்பதும் இந்த பாடல் உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் வைரலானது என்பதும் தெரிந்ததே.

இந்த பாடல் யூ டியூபில் மூன்று வாரங்களில் 76 மில்லியன் பார்வையாளர்கள் பெற்றது என்பதும் மூன்று மாதங்களில் 25 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பாடலை பாடிய தெருகுரல் அறிவு உள்பட அனைத்து கலைஞர்களுக்கும் இந்த பாடலால் மிகப் பெரிய புகழ் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த பாடலில் தோன்றிய நட்சத்திரங்களில் ஒருவரான கிராமிய பாடகி பாக்கியம் அம்மாள் திடீரென சமீபத்தில் காலமானார். இவரது மறைவு குறித்து தெருகுரல் அறிவு தனது இன்ஸ்டாவில் கூறுகையில் ’இழந்த பல உயிர்களுக்காக உங்கள் இதயத்தில் இருந்து பாடல்களை பாடுனீர்கள், இப்போது உங்கள் இழப்புக்காக வார்த்தைகள் கிடைக்காமல் நாங்கள் சிரமப்படுகிறோம். கலைஞர்களை இழக்கலாம், ஆனால் கலை எப்போதும் நிலைத்திருக்கும்’ என்று உருக்கமாக பதிவு செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.