close
Choose your channels

போலீஸ் அதிகாரிகள் யாருக்கெல்லாம் சல்யூட் வைக்க வேண்டும்?

Friday, September 17, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கேரளா மாநிலம் திருச்சூர் பகுதியில் ஏற்பட்ட புயல் பாதிப்புகளை நேற்று பாஜகவை சேர்ந்த மாநிலங்களவை எம்.பியும் நடிகருமான சுரேஷ் கோபி பார்வையிட்டார். அப்போது போலீஸ் ஜீப்பில் அமர்ந்திருந்த எஸ்.ஐ ஒருவர் எம்.பி சுரேஷ் கோபியை கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து “நான் ஒன்றும் மேயரல்ல. எம்.பி. சல்யூட் வையுங்கள்“ எனக் கூறிய வீடியோ சேனல்களில் சர்ச்சையைக் கிளப்பியது.

இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்த எம்.பி சுரேஷ் கோபி நான் அந்த போலீஸ் அதிகாரியை பார்த்து, “சார்“ என்றுதான் அழைத்தேன். மேலும் “நான் ஒரு எம்.பி. ஒரு சல்யூட் வைக்கலாமே“ என்று மென்மையாகத்தான் கேட்டேன் என்றும் விளக்கம் அளித்திருந்தார்.

இதையடுத்து போலீஸ் அதிகாரிகள் யாருக்கெல்லாம் சல்யூட் வைக்க வேண்டும்? எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு சல்யூட் வைக்க வேண்டுமா? என்பது போன்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கு கேரள போலீஸ் உயரதிகாரிகள் அளித்த விளக்கத்தில் சட்டப்பூர்வமாக தகுதி வாய்ந்தவர்களுக்கு சல்யூட் வைப்பது போலீஸின் வழக்கம். எம்.பி, எம்.எல்.ஏக்கள் அந்த பட்டியலின் கீழ் வரமாட்டார்கள். என்றாலும் ஒரு மரியாதை அடிப்படையில் அவர்களுக்கு போலீசார் வணக்கம் செலுத்துவது வழக்கம் என்று விளக்கம் அளித்துள்ளனர்.

இதேபோல கடந்த ஜுலையில் திருச்சூர் மாநகராட்சி மேயர் எம்.கே.வர்க்கீஸ் தங்களுக்கும் போலீஸ் அதிகாரிகள் சல்யூட் வைக்க வேண்டும் என்று மாநில டிஜிபி இடம் கோரிக்கை வைத்தாராம். தற்போது இந்த சர்ச்சையில் பாஜக எம்.பி சுரேஷ் கோபி சிக்கியுள்ளார். இவர் நடித்த பல்வேறு திரைப்படங்களில் அதிரடியான போலீஸ் அதிகாரியாக நடித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

உண்மையில் குடியரசு தலைவர், பிரதமர், ஆளுநர், முதலமைச்சர், கேபினட் அமைச்சர்கள், நீதிபதிகள், தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், மாவட்ட ஆட்சியர் போன்றவர்களுக்கு போலீஸார் கட்டாயமாக சல்யூட் வைக்க வேண்டும் என்று விதிமுறைகளில் கூறப்பட்டு உள்ளது.

போலீஸார் காவல்துறையில் தங்களுடைய உயரதிகாரிகளுக்கு சல்யூட் வைத்து மரியாதை செலுத்த வேண்டும். மாவட்ட எஸ்பி- டிஐஜிக்கும், டிஐஜி- ஐஜிக்கும், ஐஜி- ஏடிஜிபிக்கும், ஏடிஜிபி- டிஜிபிக்கும் சல்யூட் வைத்து மரியாதை செலுத்த வேண்டும் என்று விதிகளில் சொல்லப்பட்டு இருக்கிறது.

ஆனால் சாலைகளில் போக்குவரத்து பணிகளில் இருக்கும் இருக்கும் காவலர்கள் யாருக்கும் சல்யூட் வைக்க தேவையில்லை என்றும் விதிகளில் கூறப்பட்டு உள்ளது.

இந்நிலையில் மாநிலங்களவை எம்.பிக்கள், மக்களை எம்.பிக்கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு போலீஸார் சல்யூட் வைக்க வேண்டும் என்று விதிமுறைகளில் குறிப்பிடப்படவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.