close
Choose your channels

கர்நாடகாவில் 5 ஆயிரம் மாணவர்களுக்கு கொரோனாவா??? வைரலாகும் தகவல்!!!

Tuesday, September 1, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கர்நாடகாவில் 5 ஆயிரம் மாணவர்களுக்கு கொரோனாவா??? வைரலாகும் தகவல்!!!

 

கர்நாடக மாநிலத்தில் நுழைவுத்தேர்வு ஒன்றில் கலந்து கொண்ட 5 ஆயிரம் மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பதாகச் சமூக வலைத்தளங்களில் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தத் தகவலை ஆய்வுசெய்த அதிகாரிகள் போலியான தகவல் என்பதை தெளிவுப் படுத்தி உள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் மருத்துவம், பல் மருத்துவம், பொறியியல் போன்ற பல்வேறுத்துறை படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வான கொமேகோ வைக்கப்படுகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் படிக்க வாய்ப்பினை பெறுவர். அப்படி நடத்தப்படும் கொமேகோ நுழைவுத் தேர்வில் மாணவர்கள் கலந்து கொண்டதாகவும் அதன் மூலம் 5 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் உறுதிச் செய்யப்பட்டு இருப்பதாகவும் பரபரப்பு தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கிறது. அதுவும் தனியார் தொலைக் காட்சி ஒன்று இத்தகவலை வெளியிட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இதனால் கர்நாடகப் பகுதிகளில் கடும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் இத்தகவலை விசாரித்த அதிகாரிகள் கொமோகோ நுழைவுத் தேர்வு இன்னும் நடத்தப்படவேயில்லை. இத்தகவலில் உண்மையில்லை. இதுபோன்ற வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.