close
Choose your channels

ரஜினி வீட்டிற்கு வந்து குவியும் அஞ்சல் அட்டைகள்: என்ன காரணம்?

Monday, November 2, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பது குறித்த வாத, விவாதங்கள் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ரஜினி வீட்டிற்கு அஞ்சல் அட்டைகள் குவிந்து கொண்டிருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வலியுறுத்தி அவரது இல்லத்திற்கு அஞ்சல் அட்டை அனுப்பும் திட்டத்தை அவரது ரசிகர்கள் முன்னெடுத்துள்ளனர். இதனை அடுத்து அவரது வீட்டிற்கு அஞ்சல் அட்டைகள் வந்து குவிந்து கொண்டிருப்பதாகவும் அதில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் வாசகங்கள் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது

ஏழை எளிய மக்களும் ஏற்றம் கண்டிட நீ வா தலைவா
நேர்மையானவர்கள் துணிச்சலாக அரசியலுக்கு வர, நீ வா தலைவா

மாற்றம் ஒன்றே மாறாதது அந்த மாற்றத்தை கொண்டுவர உங்களை ஆண்டவன் அனுப்பி இருக்கான் வா தலைவா வா உங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

மக்கள் மனதில் மன்னனாக வாழ்கிறாய்
இது தங்களுக்கு கிடைத்த அரிய வரம்
தாங்கள் அரசியலில் ஈடுபட்டால் மக்களுக்கு மாற்றம் வரும்

போன்ற வாசகங்கள் அந்த அஞ்சலட்டையில் உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இதற்கு ரஜினியின் ரியாக்சன் என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.