close
Choose your channels

பிக்பாஸ் வீட்டில் மீண்டும் பணப்பெட்டி.. கதிரவனை அடுத்து யார்?

Wednesday, January 18, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒவ்வொரு சீசனிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடைசி வாரத்தில் பணப்பெட்டி அறிமுகம் செய்யப்படும் என்றும் அந்த பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற ஒரு போட்டியாளர் வெளியேறுவார் என்பது தெரிந்ததே.

கடந்த சீசன்களில் கவின், கேப்ரில்லா, சிபி சக்கரவர்த்தி ஆகியோர் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறிய நிலையில் நேற்று அறிமுகம் செய்யப்பட்ட பணமூட்டையில் இருந்த மூன்று லட்ச ரூபாயை எடுத்துக் கொண்டு கதிரவன் வெளியேறினார் என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் பிக்பாஸ் வரலாற்றில் முதல்முறையாக இரண்டாவது முறையாக பணப்பெட்டி வைக்கப்பட்டுள்ளது. சற்றுமுன் வெளியான வீடியோவில் மூன்று லட்ச ரூபாய் மதிப்புள்ள பணப்பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த பணப்பெட்டியின் மதிப்பு ஒவ்வொரு நிமிடமும் அதிகரித்துக் கொண்டே இருக்கும் என்றும் இந்த பணப்பெட்டியை தற்போது இருக்கும் ஐந்து இறுதி போட்டியாளர்களின் ஒருவர் எடுத்துக் கொண்டு செல்லலாம் என்றும் பிக் பாஸ் அறிவிக்கின்றார்.

இதனை அடுத்து ஷிவின், விக்ரமன், அசீம், மைனா மற்றும் அமுதவாணன் ஆகிய ஐந்து போட்டியாளர்களில் யார் இந்த பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு செல்வார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.