சுந்தர் சியின் அடுத்த படத்தில் இணைந்த 4வது ஹீரோயின்!

  • IndiaGlitz, [Friday,February 04 2022]

சுந்தர் சி யின் அடுத்த திரைப்படத்தில் 3 ஹீரோயின்கள் நடித்து வரும் நிலையில் தற்போது நான்காவதாக ஒரு ஹீரோயின் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சுந்தர்சி இயக்கத்தில் உருவாகி வரும் அடுத்த திரைப்படத்தில் ஜெய், ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய மூன்று ஹீரோக்களும் மாளவிகா ஷர்மா, அம்ரிதா மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகிய மூன்று ஹீரோயின்களும் நடித்து வருகின்றனர். குஷ்புவின் அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தில் நான்காவது ஹீரோயினாக நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான ரைசா வில்சன் இணைந்துள்ளார். இந்த படத்தில் அவர் ஒரு பாடகி கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் இதுவரை தான் நடிக்காத கேரக்டர் என்பதால் இந்த கேரக்டரில் நடிப்பது தனக்கு த்ரில்லாக இருப்பதாகவும் ரைசா வில்சன் தெரிவித்துள்ளார்

தற்போது சென்னையில் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பில் ரைசா வில்சன் கலந்து கொண்டு இருப்பதாகவும், அவரது காட்சிகளும் படமாக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சுந்தர் சி யின் அடுத்த திரைப்படத்தில் 4 ஹீரோயின்கள் நடித்து இருப்பதாக வெளிவந்த தகவல் இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

More News

விண்ணில் இருந்து குதித்து சாகசம் செய்த தமிழ் நடிகை: வீடியோ வைரல்

தமிழ் நடிகை ஒருவர் விண்ணில் இருந்து குதித்து சாகசம் செய்த வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

தோழிகளுடன் செம எஞ்ஜாய் செய்யும் தளபதி விஜய் பட நடிகை: வைரல் வீடியோ

தளபதி விஜய் நடித்த படத்தில் நடித்த நடிகை ஒருவர் தோழிகளுடன் கடலில் செம எஞ்ஜாய் செய்து நடனமாடிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் சுட்டுக்கொலை… பகிரங்க அறிவிப்பு வெளியிட்ட அதிபர்!

சிரியாவில் நடைபெற்ற வான் தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத

த்ரிஷாவைத் தொடர்ந்து விலங்குகளுக்காகக் குரல் கொடுக்கும் தனுஷ் பட நடிகை!

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான “பொல்லாதவன்“ திரைப்படத்தில்

பிறந்தநாளில் மறக்க முடியாத பரிசு பெற்ற நடிகர் சிம்பு!

நடிகர் சிம்பு நேற்று தன்னுடைய 39 ஆவது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக