close
Choose your channels

சுந்தர் சியின் அடுத்த படத்தில் இணைந்த 4வது ஹீரோயின்!

Friday, February 4, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சுந்தர் சி யின் அடுத்த திரைப்படத்தில் 3 ஹீரோயின்கள் நடித்து வரும் நிலையில் தற்போது நான்காவதாக ஒரு ஹீரோயின் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சுந்தர்சி இயக்கத்தில் உருவாகி வரும் அடுத்த திரைப்படத்தில் ஜெய், ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய மூன்று ஹீரோக்களும் மாளவிகா ஷர்மா, அம்ரிதா மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகிய மூன்று ஹீரோயின்களும் நடித்து வருகின்றனர். குஷ்புவின் அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தில் நான்காவது ஹீரோயினாக நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான ரைசா வில்சன் இணைந்துள்ளார். இந்த படத்தில் அவர் ஒரு பாடகி கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் இதுவரை தான் நடிக்காத கேரக்டர் என்பதால் இந்த கேரக்டரில் நடிப்பது தனக்கு த்ரில்லாக இருப்பதாகவும் ரைசா வில்சன் தெரிவித்துள்ளார்

தற்போது சென்னையில் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பில் ரைசா வில்சன் கலந்து கொண்டு இருப்பதாகவும், அவரது காட்சிகளும் படமாக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சுந்தர் சி யின் அடுத்த திரைப்படத்தில் 4 ஹீரோயின்கள் நடித்து இருப்பதாக வெளிவந்த தகவல் இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.