close
Choose your channels

த்ரிஷாவைத் தொடர்ந்து விலங்குகளுக்காகக் குரல் கொடுக்கும் தனுஷ் பட நடிகை!

Friday, February 4, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான “பொல்லாதவன்“ திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை திவ்யா ஸ்பந்தனா. இவர் தற்போது பெங்களூருவில் விலங்குகள் நல ஆர்வலர்களோடு கைக்கோர்த்து செயல்பட்டு வருகிறார். மேலும் சமீபத்தில் நடைபெற்ற ஒரு சாலை விபத்து தொடர்பாக கோபமான தனது கருத்துகளையும் அவர் வெளியிட்டு இருக்கிறார்.

சாலையில் படுத்துக்கொண்டிருந்த நாய் ஒன்றை பெங்களூருவின் ஜெய்நகர் அருகே பிரபல தொழில்அதிபர் ஒருவரின் பேரன் ஆதி என்பவர் வேண்டுமென்றே காரை ஏற்றியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பான சிசிடிவி கார்சிகள் வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்பட்ட நிலையில் ஆதியை போலீசார் கைது செய்தனர். பின்னர் விபத்தில் சிக்கிய நாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அந்த நாய் உயிரிழந்திருப்பது பொது மக்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது.

இதுதொடர்பாக பேசிய நடிகை திவ்யா ஸ்பந்தனா விபத்துகள் நடப்பதை ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் இந்த நாய் வேண்டுமென்றே கார் ஏற்றிக்கொல்லப்பட்டது. இதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. நம் நாட்டில் விலங்குகள் தொடர்பான சட்டங்கள் கடுமையானதாக இல்லை. அது கடுமையாக்கப்பட்டால் மட்டுமே இதுபோன்ற குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க முடியும் எனக் கடுமையாகப் பேசியுள்ளார். இவரது கருத்திற்கு சிலர் ஆதரவு அளித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.