close
Choose your channels

பொதுமக்கள் மத்தியில் ஜனாதிபதியை பளார் விட்ட இளைஞர் கைது!

Wednesday, June 9, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பொதுமக்கள் மத்தியில் ஜனாதிபதியை கன்னத்தில் பளாரென அறைந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் சமீபத்தில் தென் கிழக்கு மாகாணத்தில் சுற்றுப்பயணம் செய்தபோது அவர் தன்னை வரவேற்க காத்திருந்த பொதுமக்களிடம் கைகுலுக்கி அவருடைய வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.

இந்த நிலையில் கூட்டத்தில் கைகுலுக்க காத்திருந்த இளைஞர் ஒருவர் கை கொடுப்பது போல் நடித்து திடீரென ஜனாதிபதியின் கன்னத்தில் அறைந்தார். இதனையடுத்து அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக அந்த இளைஞரை மடக்கிப் பிடித்தனர். அந்த இளைஞருடன் வந்திருந்த இன்னொரு இளைஞரையும் போலீசார் கைது செய்து இருவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் கன்னத்தில் பளார் விட்ட இளைஞர் குறித்த வீடியோ உலகம் முழுவதும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.