close
Choose your channels

சூப்பர் சிங்கர் சிறப்பு விருந்தினர் கங்கை அமரன்.. திடீரென கோபப்பட்டதால் பரபரப்பு..!

Friday, June 16, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் சிங்கர் சீசன் 9 தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சி இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் வழக்கம் போல் சித்ரா, ஆனந்த் வைத்தியநாதன், புஷ்பவனம் கந்தசாமி மற்றும் ஷிவாங்கியின் அம்மா பென்னி கிருஷ்ணகுமார் ஆகியோர் நடுவர்களாக உள்ளனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் பிரபல இசையமைப்பாளர், இயக்குனர் கங்கை அமரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த வாரம் தொகுப்பாளர்கள் மாகாபா மற்றும் குரேஷி இருந்த நிலையில் அவ்வப்போது நடுவர்களை அவர்கள் கலாய்த்தனர். இந்த நிலையில் திடீரென சிறப்பு விருந்தினர் கங்கை அமரனை இருவரும் மாறி மாறி கலாய்த்ததால் அவர் கோபமடைந்து தான் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியே போவதாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் போது அருணாவை பாட அழைக்கும் போது பின்னணியில் ஒரு இசை ஒலிக்கப்பட்டது. அந்த இசையை மாகாபா சீரியல் இசை மாதிரி இருக்கிறது என்று கிண்டல் செய்ய, உடனே கங்கை அமரன் ’அது நான் கஷ்டப்பட்டு போட்ட பாட்டு என கூறினார். இதனால் மாகாபா அதிர்ச்சி அடைந்த நிலையில் அடுத்ததாக ‘வந்தனம் என் வந்தனம்’ என்ற பாடல் ஒலிக்கப்பட்டது. இதை கேட்டதும் மாகாபா, ‘இது என்ன வந்தனம் சைதாப்பேட்டை நந்தனம்’ என கிண்டல் செய்ய திரும்பவும் கோபப்பட்ட கங்கை அமரன் நிகழ்ச்சியை விட்டு போறேன் என்று கூறினார். உடனே நீங்கள் போகாதீர்கள், நீங்கள் போனால் நானும் வந்துருவேன்’ என்று நக்கல் செய்ய கடுப்பான கங்கை அமரன் ’ஏய்’ என்று அதட்டுவது டன் புரமோ வீடியோ முடிவுக்கு வருகிறது.

வழக்கம் போல் இதுவும் பிராங்கா? அல்லது கங்கை அமரன் உண்மையாகவே கோபமடைந்து வெளியேறினாரா? என்பதை நாளைய நிகழ்ச்சியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.