close
Choose your channels

இலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்சே அபார வெற்றி!

Sunday, November 17, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இலங்கை அதிபர் மைத்திரியபால சிறிசேனாவின் பதவிக்காலம் வரும் ஜனவரியுடன் முடிவடைவதை அடுத்து புதிய அதிபரை தேர்வு செய்ய நேற்று பலத்த பாதுகாப்புடன் அந்நாட்டில் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 30க்கும் மேற்பட்டோர் போட்டியிட்ட போதிலும்.

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்றிரவு முதல் எண்ணப்பட்ட நிலையில் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபட்ச மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் பிரேமதாசா ஆகிய இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

இன்று காலை முதல் முன்னிலை விவரம் தெரிய வந்தபோது இருவரும் மாறி மாறி முன்னிலை பெற்று வந்தனர். தமிழர்கள் பகுதியில் சஜித் பிரேமதாசா நல்ல ஆதரவு இருந்தது வாக்கு எண்ணிக்கையில் தெரிய வந்தது.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான இறுதி முடிவில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இலங்கையின் அடுத்த அதிபராக வரும் 20ஆம் தேதி கோத்தபய ராஜபக்சே பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் அதிபர் மஹிந்தா ராஜபக்சேவின் சகோதரர் தான் கோத்தபய ராஜபக்சே என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திரமோடி தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.