குஜராத் தேர்தல் வெற்றி நாயகனுடன் பா.ரஞ்சித் சந்திப்பு

  • IndiaGlitz, [Monday,January 15 2018]

சமீபத்தில் நடைபெற்ற குஜராத் மாநில தேர்தலில் பிரதமர் மோடி மற்றும் பாஜக அலையையும் மீறி சுயேட்சையாக வெற்றி பெற்றவர் ஜிக்னேஷ்.  34 வயதான 'ஜிக்னேஷ் மேவானி' என்ற இளைஞர். 'ராஷ்ட்ரிய தலித் அதிகார் மன்ச்' என்ற அமைப்பை நடத்திவருகிறார். குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில், பனஸ்கந்தா மாவட்டத்தின் வட்காம் தனித் தொகுதியில் இவர் பெற்ற வெற்றி சமகால அரசியலில் மிக முக்கியமான வெற்றி. பா.ஜ.க வேட்பாளருடன் நேரடியாக போட்டியிட்ட ஜிக்னேஷ், கிட்டத்தட்ட 20 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். தொடர்ந்து ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினரின் மீது தாக்குதல் நடந்துவரும் காலகட்டத்தில், மோடியின் கோட்டையாக கூறப்படும் குஜராத்தில், சுயேச்சையாக ஜிக்னேஷ் வெற்றி பெற்றதை இந்தியாவே திரும்பி பார்த்தது.

இந்த நிலையில் ஜிக்னேஷ் எம்.எல்.ஏ நேற்று 'கபாலி' பட இயக்குனர் பா.ரஞ்சித்தை சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து ஜிக்னேஷ் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'சூப்பர் டூப்பர் ஹிட் படமான 'கபாலி' படத்தை இயக்கிய ரஞ்சித்தை சந்தித்தேன். அவருடனான இந்த சந்திப்பு மிக அருமையானது. மிக அன்பான மனிதரான அவருடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடினேன்' என்று தெரிவித்துள்ளார்.

இதுவொரு எதிர்பாராத, அன்பான சந்திப்பு என்றும், அவருடைய சிறப்பான பணிகளுக்கும், ஒற்றுமைக்கு செய்யும் விடாமுயற்சி அபாரமானது. அவரது பணி மேலும் சிறக்க எனது வாழ்த்துக்கள்' என்று இயக்குனர் ரஞ்சித் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

More News

பிரபல எழுத்தாளர், பத்திரிகையாளர் ஞாநி காலமானார்.

பிரபல தமிழ் எழுத்தாளரும், பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான ஞானிசங்கரன் இன்று அதிகாலை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்

பாலா-ஜோதிகாவின் 'நாச்சியார்' டிரைலர் விமர்சனம்

பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் 'நாச்சியார்' திரைப்படம் வரும் பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தில் அருள்நிதியின் நடிப்பு பேசப்படும்: தயாரிப்பாளர் நம்பிக்கை

அருள்நிதி நடிக்கும் அடுத்த படம் 'இரவுக்கு ஆயிரம் கண்கள். புதுமுக இயக்குனர் மாறன் இயக்கியுள்ள இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

எஸ்.பி.ஜனநாதன் - விக்னேஷ் சிவன் உதவியாளர்கள் இணையும் 'வஞ்சகர் உலகம்'

கோலிவுட் திரையுலகில் பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனின் உதவி இயக்குனர் தற்போது இயக்கி வரும் திரைப்படம் 'வஞ்சகர் உலகம்.

ஊரூர் ஆல்காட் குப்பம் விழா 2018 குறித்த அறிவிப்பு

ஊரூர் ஆல்காட் குப்பம் விழா என்ற தமிழர் திருநாள் நிகழ்ச்சி வரும் 15ஆம் தேதி அதாவது நாளை திருவள்ளுவர் நகர் சமுதாய கூடம், 1-வது குறுக்கு தெரு, திருவள்ளுவர் நகர், பெசன்ட் நகர் என்ற இடத்தில் நடைபெறவுள்ளது.