close
Choose your channels

இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தில் அருள்நிதியின் நடிப்பு பேசப்படும்: தயாரிப்பாளர் நம்பிக்கை

Sunday, January 14, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனக்கேற்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்து ரசிகர்கள் விரும்பும் வகையில் வெற்றி படங்களை கொடுத்து வரும் நடிகர்களில் ஒருவர் அருள்நிதி. இவர் நடிக்கும் அடுத்த படம் 'இரவுக்கு ஆயிரம் கண்கள். புதுமுக இயக்குனர் மாறன் இயக்கியுள்ள இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படம் குறித்து தயாரிப்பாளர் டில்லி பாபு பேசுகையில் , '' இந்த படத்தின் மேல் எங்களுக்கு இருந்த பேரார்வம் தான் திரையில் வெளிப்பட்டு மக்களை கவர்ந்துள்ளது . தமிழ் சினிமா ரசிகர்கள் 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தின் ட்ரைலருக்கு கொடுத்துள்ள வரவேற்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்துள்ளது. இப்படத்தின் கதை மற்றும் திரைகதையை இயக்குனர் மாறன் அருமையாக வடிவமைத்துள்ளார். இப்படத்தில் அருள்நிதியின் நடிப்பு நிச்சயம் பேசப்படும். வரும் மாதங்களில் ரிலீசாக இப்படம் தயாராகவுள்ளது.''

இப்படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக மஹிமா நடித்துள்ளார். அஜ்மல் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சாம் CS இசையில் , சான் லோகேஷின் படத்தொகுப்பில், அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவில் 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' உருவாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.