close
Choose your channels

பாலா-ஜோதிகாவின் 'நாச்சியார்' டிரைலர் விமர்சனம்

Sunday, January 14, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் 'நாச்சியார்' திரைப்படம் வரும் பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் டீசரில் ஜோதிகா பேசிய ஒரு வசனம் பெரும் சர்ச்சைக்குள்ளான நிலையில் இந்த டிரைலர் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்

டிரைலரின் முதல் காட்சியில் இருந்தே பாலாவின் வழக்கமான வன்முறை காட்சிகள் ஆரம்பமாகிவிடுகிறது. ரெளடிகளை துரத்துவது, பிளேடால் ரெளடிகளை காயப்படுத்துவது, லட்டியால் குற்றவாளிகளை வெளுத்து வாங்குவது என ஜோதிகாவின் காட்சிகள் பதற வைக்கின்றன. 'நீ போலீசா இல்லை புரபசனல் ரெளடியாம்மா' என்ற வசனத்தில் இருந்தே இதனை பாலா உறுதி செய்கிறார்.

இந்த டிரைலரிலும் 'Bloody Lilliput'  என்ற ஒரு வசனத்தை ஜோதிகா பேசுகிறார். இதற்கு என்ன அர்த்தம் என்பதை வெகுவிரைவில் நெட்டிசன்கள் கண்டுபிடித்து சர்ச்சைக்குள்ளாக்குவார்கள் என்று எதிர்பார்க்கலாம்

டிரைலர் முழுவதும் ஜி.வி.பிரகாஷை போலீஸ் விரட்டும் காட்சிகள் அதிகமாகவும், ரொமான்ஸ் மற்றும் காமெடி காட்சிகள் குறைவாகவும் இருப்பதால் படத்திலும் இதேபோல் தான் இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசையும் ஈஸ்வரின் ஒளிப்பதிவும் இந்த படத்தின் முழு பகுதியை உடனே பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது. மொத்தத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷை வைத்து ஒரு விறுவிறுப்பான ஆக்சன் கதையை பாலா தனது பாணியில் வழங்கியுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.