close
Choose your channels

தனக்குத் தானே திருமணம்… இந்திய இளைஞர்களை அலறவைக்கும் தகவல்!

Friday, June 3, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

குஜராத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவரின் திருமணம் தற்போது இந்தியா முழுக்கவே பேசுபொருளாகி இருக்கிறது. காரணம் ஒரு ஆணை திருமணம் செய்துகொள்ள விரும்பாமல் அவர் எடுத்துள்ள அதிரடியான முடிவு பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

குஜராத்தைச் சேர்ந்த ஷாமா பிந்து(24) என்பவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் ஆன பெண்களைப் போல நெற்றியில் குங்குமம் வைத்துக்கொண்டு மங்களகரமாக வலம்வர வேண்டும் என்று ஆசை. ஆனால் ஒரு ஆணை திருமணம் செய்துகொள்ள அவருக்கு விருப்பமே இல்லையாம். இதனால் அனைத்துவித சடங்குகளோடு வரும் 11 ஆம் தேதி தன்னைத்தானே திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளார்.

இதுகுறித்துப் பேசிய பிந்து, எனக்கு யாரையும் திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை. ஆனால் மணப்பெண்ணாக வேண்டும் என விரும்புகிறேன். அதனால் என்னை நானே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தேன். நாட்டில் எங்கேயாவது சுய திருமணம் நடந்துள்ளதா என்று இணையத்தில் தேடிப்பார்த்தேன். ஆனால் எந்த தகவலும் இல்லை. நம் நாட்டில் தன்னைத் தானே நேசிக்கும் நபருக்கு உதாரணமாக நான் இருக்கலாம் என்று முடிவுசெய்தேன். என்னுடைய முடிவு அர்த்தம் இல்லாததாக தோன்றலாம். ஆனால் என்னுடைய விருப்பம்தான் முக்கியம் என்று தடாலடியாகக் கருத்துத் தெரிவித்துள்ளார்.

மேலும் பிந்துவின் திருமணத்திற்கு அவருடைய பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர். மேலை நாடுகளில் இதுபோன்ற திருமணங்கள் அதிகரித்து வரும் சூழலில் இந்தியாவிலும் இப்படியொரு திருமணமா? என்று பலரும் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.