close
Choose your channels

ஜெய்ப்பூரிலும் எங்க தர்பார் தான்: வெற்றிக்கு பின் ஹர்பஜன்சிங்கின் டுவீட்

Friday, April 12, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் ஒவ்வொரு போட்டி முடிந்தவுடனும் சிஎஸ்கே ரசிகர்கள் உடனே செல்வது ஹர்பஜன் சிங்கின் டுவிட்டர் பக்கத்திற்காகதான் இருக்கும். போட்டி முடிந்தவுடன் அவர் போடும் டுவீட் பெரும் வரவேற்பை பெற்று வருவதே இதற்கு காரணம்.

இந்த நிலையில் நேற்றைய போட்டியில் ஹர்பஜன்சிங் விளையாடாவிட்டாலும் தனது அணியின் வெற்றி குறித்து அவர் தனது டுவிட்டரில் ரஜினியின் 'தர்பார்' படத்துடன் இணைத்து பதிவு செய்துள்ளார். அவர் பதிவு செய்திருக்கும் டுவீட் இதுதான்:

நாங்க வந்தது வேணும்னா ஜெய்பூரா @rajasthanroyals இருக்கலாம், ஆனா அங்கேயும் @IPL ல எங்களோட #தர்பார் தான். ஏற்றிவிட்ட ஏணிய நாங்க மறந்ததுமில்ல, @ChennaiIPL தூள் கிளப்பாத இடமுமில்ல. களத்துல மட்டும் தான் நாங்க மொறப்போம், நண்பா கொஞ்சம் வெளியில வந்துப்பாருங்க வெல்லந்தியா சிரிப்போம் #RRvCSK என்று பதிவு செய்துள்ளார். வழக்கம்போல் ஹர்பஜன்சிங்கின் இந்த டுவீட்டுக்கும் லைக்ஸ்கள் குவிந்து வருகிறது,

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.