close
Choose your channels

விசாரணை'யில் இருந்து விலகினாரா அக்ஷயகுமார்?

Friday, February 12, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற வெற்றிமாறனின் 'விசாரணை' திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆகவுள்ளதாகவும், இந்த படத்தின் இந்தி ரீமேக் உரிமையை பிரபல மலையாள இயக்குனர் பிரியதர்ஷன் பெற்றுள்ளதாகவும் வந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்.
மேலும் இந்த படத்தில் சமுத்திரக்கனி நடித்த முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகரும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் '2.0' படத்தின் வில்லனுமாகிய அக்ஷயகுமார் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது வந்துள்ள புதிய தகவலின்படி இந்த படத்தில் அக்ஷயகுமார் நடிக்கவில்லை என்றும், அவருக்கு பதிலாக வெறொரு பாலிவுட் நடிகரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
'லாக்கப்' என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் நான்கு அப்பாவி இளைஞர்கள் செய்யாத குற்றத்திற்காக காவல்துறையினர்க்களின் கொடூர தாக்குதலுக்கு உள்ளாகியைதை தோலுரித்து காட்டும் படம் ஆகும். இந்த படம் பாலிவுட்டில் பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.