close
Choose your channels

கள்ள உறவில் பிறந்தவர் அவர்...!எதிர்கட்சியினரை பார்த்து  ராசா சர்ச்சை பேச்சு...!

Saturday, March 27, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வரை குறித்து தரம் தாழ்ந்து பேசிய ஆ.ராசாவுக்கு, சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் கண்டனங்கள் பெருகி வருகின்றன.

திராவிட முன்னேற்ற கழகம் பெண்களுக்கு எதிரான கட்சி, என்பது ராசாவின் சர்ச்சை பேச்சு மூலம் நிரூபணமாகிவிட்டது என்று பெண்கள் அமைப்பினர் கூறியுள்ளனர். சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பிரச்சாரம் செய்த செய்த திமுக முன்னாள் அமைச்சர் சர்ச்சையான கருத்துக்களை கூறியுள்ளார்.

அவர் பேசியது, ”ஸ்டாலின் நல்ல உறவின் மூலம் பிறந்த குழந்தை” எனவும், ”முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கள்ள உறவில் பிறந்த குழந்தை” எனவும் கூட்டத்தில் கூறியுள்ளார். முதல்வரை குறித்து ராசா தரம் குறைவாக பேசியிருப்பது, அரசியல் கட்சியினர், பொதுமக்கள் மற்றும் பெண்கள் மத்தியில் கோபத்தை எழுப்பியுள்ளது. ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக, திமுகவினர் கீழ்த்தரமாக பேசுகிறார்கள் என அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

திமுக சார்பில் கனிமொழி கூறியிருப்பதாவது,
" பெண்களை இழிவுபடுத்திப் பேசும் அரசியல் தலைவர்கள் யாராக இருந்தாலும் சரி, அவர்களின் கீழ்த்தரமான விமர்சனங்கள் தண்டனைக்குரியது" என்று கண்டனங்களை தெரிவித்துள்ளார்.


அதேபோல் ஊடகங்கள் மற்றும் சமூகவலைத்தளங்களிலும் ராசாவுக்கு தொடர்ந்து கண்டனங்கள் கிளம்பி வருகிறது. தேர்தல் களம் சூடுபிடித்து வரும் இச்சூழலில், இது போன்று கீழ்த்தரமாக விமர்சனங்கள் செய்பவர்களை, பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கைகளும் வந்த வண்ணம் உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.