close
Choose your channels

கனமழை எதிரொலி: 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

Wednesday, October 30, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மிதமான, கனமழை பெய்து வரும் நிலையில் ஒருசில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும், ஒருசில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சி தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

அதன்படி தேனி, விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை என்றும், நெல்லை, வேலூர், தூத்துக்குடி, ராமநாதபுரம், வேலூர், திண்டுக்கல், சிவகெங்கை, ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்றும் அந்தந்த மாவட்ட ஆட்சி தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை என்றும், வழக்கம்போல் இம்மூன்று மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.