close
Choose your channels

வரலட்சுமியின் 'சேவ் சக்தி'க்கு ஆன்லைனில் ஆதரவு கொடுப்பது எப்படி?

Thursday, March 9, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகை பாவனா பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவம் நடிகைகள் இடையே பல விழிப்புணர்ச்சிகளை ஏற்படுத்தியுள்ளது. நடிகைகள் உள்பட திரையுலகில் உள்ள பெண் கலைஞர்களின் பாதுகாப்பிற்காக சமீபத்தில் நடிகை வரலட்சுமி சேவ் சக்தி என்ற அமைப்பை ஆரம்பித்தார்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரணை செய்ய மகிளா நீதிமன்றம் அமைக வேண்டும் என்றும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரனை செய்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதும் இந்த சேவ் சக்தியின் இரண்டு முக்கிய கோரிக்கைகள்
இந்த கோரிக்கைகளை அரசிடம் வலியுறுத்த பொதுமக்களிடம் கையெழுத்து பெற நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் திரையுலகினர், பொதுமக்கள் ஏராளமானோர் கையெழுத்திட்டு இந்த அமைப்பின் கொள்கைக்கு ஆதரவளித்தனர்
குறைந்தபட்சம் 500 கையெழுத்துக்கள் பெற வேண்டும் என்ற இலக்குடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் 400க்கும் மேற்பட்ட கையெழுத்துகள் இதுவரை கிடைத்துள்ளன. இந்நிலையில் நேற்று வள்ளுவர் கோட்டத்தில் கலந்து கொள்ள முடியாதவர்கள் ஆன்லைனிலும் கையெழுத்திட்டு தங்களது ஆதரவை தெரிவிக்கலாம் என்று வரலட்சுமி தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்து அதற்கான இணையதள முகவரியையும் பதிவு செய்துள்ளார்.
வரலட்சுமியின் சேவ் சக்தி இயக்கத்திற்கு ஆதரவாக ஆன்லைனில் கையெழுத்திட விரும்புபவர்கள் http://bit.ly/2msDDpJ இந்த இணையதளத்தை க்ளிக் செய்து தங்களது ஆதரவை தெரிவிக்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.