close
Choose your channels

கொழுந்தியாள் ஆபாச படத்தை வைத்து மனைவியை மிரட்டிய கணவர்: சென்னையில் பரபரப்பு

Friday, January 31, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னையைச் சேர்ந்த ஒருவர் தனது கொழுந்தியாள் ஆபாச படத்தை வைத்து மனைவியை மிரட்டியதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வளசரவாக்கத்தில் சேர்ந்த தினேஷ் என்பவருக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆனது. இவருக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் தினேஷ் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தனது மனைவியுடன் தகராறு செய்ததால் அவரது மனைவி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் மனைவியின் தங்கை அவ்வப்போது தினேஷின் வீட்டுக்கு வந்தபோது அவர் குளிப்பதை மறைந்திருந்து மொபைல் போனில் தினேஷ் வீடியோ எடுத்து வைத்திருந்ததாக தெரிகிறது.

இந்த வீடியோவை நேற்று தனது மனைவிக்கு கொழுந்தியாவின் ஆபாச வீடியோக்களை அனுப்பிய தினேஷ் தன்னுடன் குடும்பம் நடத்த வராவிட்டால் கொழுந்தியாளின் ஆபாச படத்தை இணையதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி போலீசில் புகார் கொடுக்க, போலீஸார் தினேஷை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.