close
Choose your channels

மனைவியின் ஆபாச படங்களை ஃபேஸ்புக்கில் அப்லோடு செய்த கணவன் கைது!

Friday, November 15, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னையை அடுத்த செங்கல்பட்டு பகுதியில் மதன், காஞ்சனா ஆகிய இருவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் ஆகியோர் உள்ளனர்.

இந்த நிலையில் சமீபத்தில் காஞ்சனா மற்றும் மதன் ஆகிய இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து, காஞ்சனா தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு தனியாக குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். மேலும் தன்னுடைய வாழ்வாதாரத்திற்காக அவர் ஒரு சிறிய டெய்லர் கடை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் தன்னுடைய புகைப்படம் ஆபாசமாக வடிவமைக்கப்பட்டு வாட்ஸ்அப்பில் பரவி வருவதாக அவருக்கு அதிர்ச்சி தகவல் வெளிவந்தது. இதனையடுத்து அவர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தா.ர் இந்த புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் இதுகுறித்து விசாரணை செய்த போது, விவாகரத்து பெற்ற முன்னாள் கணவரின் வேலை தான் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை அழைத்த போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்

இந்த நிலையில் காஞ்சனாவின் முன்னாள் கணவர் மதன், தனது காஞ்சனாவின் பெயரில் ஒரு போலியான பேஸ்புக் கணக்கை ஆரம்பித்து அதில் காஞ்சனாவின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து, அதில் காஞ்சனாவின் தொலைபேசி எண்ணையும் பதிவு செய்துள்ளார். இதனைப் பார்த்த பலர் காஞ்சனாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசி உள்ளனர். காஞ்சனாவின் சகோதரி மற்றும் அவருடைய உறவினர் பெண்களையும் அதே ஃபேஸ்புக் கணக்கில் ஆபாசமாக வடிவமைத்து மதன் பதிவு செய்துள்ளார்.

இதனால் மீண்டும் அதிர்ச்சி அடைந்த காஞ்சனா காவல் நிலையத்தில் புகார் செய்ய, காவல்துறையினர் மதனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தனது மனைவியை விவாகரத்து பெற்று சென்று விட்டதால் ஏற்பட்ட கோபத்தில் அவரை பழி வாங்குவதற்காக மதன் இது போன்று காஞ்சனாவின் புகைப்படத்தையும், அவருடைய உறவினர்களின் புகைப்படத்தையும் பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.