close
Choose your channels

பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல நான் தயார்! யாஷிகா ஆனந்த்

Thursday, June 27, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் பாகத்தில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான யாஷிகா, பல நேரங்களில் பார்வையாளர்களின் வெறுப்பை சம்பாதித்தாலும், பிக்பாஸ் ஆதரவால் கிட்டத்தட்ட போட்டியின் இறுதிவரை சென்றார். இவரும் ஐஸ்வர்யா தத்தாவும் இந்த நிகழ்ச்சியால்தான் நெருக்கமானார்கள். இந்த நெருக்கம் இன்று வரை தொடர்ந்து கொண்டு வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட யாஷிகாவிடம் நீங்கள் மீண்டும் பிக்பாஸில் கலந்து கொள்வீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, 'நிச்சயமாக செல்வேன். ஆனால் போட்டியாளராக என்னால் செல்ல முடியாது, விருந்தினராக அழைத்தால் நிச்சயம் செல்வேன். பிக்பாஸ் நிகழ்ச்சியால் தான் இன்று நான் நல்ல நிலையில் உள்ளேன்' என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே கஞ்சா கருப்பு சிறப்பு விருந்தினராக பிக்பாஸ் வீட்டிற்கு சென்று திரும்பிய நிலையில் யாஷிகாவும், ஐஸ்வர்யாவும் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு விருந்தினராக செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.