close
Choose your channels

கொரோனா பரிசோதனையால் கன்னித்தன்மையை இழந்தேன்: பிரபல நடிகையின் அதிர்ச்சி டுவீட்

Monday, August 17, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா பரிசோதனைக்கு சென்றதால் கன்னித்தன்மையை இழந்தேன் என பிரபல நடிகை ஒருவர் தனது டுவிட்டரில் பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பிரபல பாலிவுட் நடிகை மற்றும் வெப்சீரிஸ் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் குப்ரா சேட். இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகை குப்ரா சேட் சமீபத்தில் பல்வலி காரணமாக மருத்துவமனை சென்றதாகவும், மருத்துவமனையில் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதாகவும் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்

கொரோனா பரிசோதனை அனுபவம் குறித்து தனது டுவிட்டரில் நடிகை குப்ரா சேட் கூறியதாவது: ’கொரோனா பரிசோதனை மூலமாக எனது கன்னி தன்மையை இழந்தேன். நான் நினைத்தது போல அது ஒன்றும் அவ்வளவு மோசமாக இல்லை. விரைவிலேயே முடிந்துவிட்டது. இந்த பரிசோதனையின் போது எனது முன்னாள் காதலர்கள் சிலர் ஞாபகத்திற்கு வந்தனர். மேலும் பரிசோதனையின் போது நான் தும்மினேன்’ என்றும் பதிவு செய்துள்ளார்

இந்த பதிவில் உள்ள காமெடியான உள் அர்த்தத்தை உணர்ந்து ரசிகர்கள் பலர் ஜாலியான எமோஜிகளை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.