close
Choose your channels

சிவகார்த்திகேயன் மாதிரி என்னால் நடிக்க முடியாது: அருள்நிதி

Monday, March 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் மாதிரி தன்னால் நடிக்க முடியாது என நடிகர் அருள்நிதி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் சிறந்த கதைகளை தேர்வு செய்து தொடர்ச்சியாக வெற்றி படங்களை கொடுத்து வரும் நடிகர்களில் ஒருவர் அருள்நிதி. குறிப்பாக இவர் த்ரில் மற்றும் ஆக்சன் கதையம்சம் கொண்ட படங்களை மட்டுமே தேர்வு செய்து வருகிறார். தற்போது இவர் நடித்து வரும் ‘தேஜவு’ உள்பட அனைத்து படங்களும் ஆக்ஷன் திரில்லர் கதையம்சம் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் அருள்நிதி அளித்த பேட்டியில், ‘எனக்கு திரில்லர் மற்றும் ஆக்ஷன் கதைகளில் நடிப்பதில் மட்டுமே மிகவும் சுலபமாக உள்ளது. எனவே தான் நான் நடித்து வரும் ‘தேஜவு’ உள்பட அனைத்து படங்களும் முழுக்க முழுக்க த்ரில் கதையம்சம் கொண்டதாக உள்ளது.

சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்களில் இருக்கும் நடிப்பு, காமெடி, நடனம் என அனைத்திலும் என்னால் நடிக்க முடியாது. சிவகார்த்திகேயன் திரைப்படத்தில் கதை கொஞ்சம் வீக்காக இருந்தால் அதை தனது நடிப்பு நடனம் ஆகியவற்றின்மூலம் அவர் தூக்கி நிறுத்தி விடுவார். அதுபோல என்னால் முடியாது. எனவே சிவகார்த்திகேயன் போல படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பது ரொம்ப கஷ்டம் என்று கூறியுள்ளார்.

நடிகர் அருள்நிதி தற்போது டைரி, டி ப்ளாக், தேஜவு ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பதும், இந்த படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது,

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.